×

திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இளம்பெண் சாவு சாவில் சந்தேகம் பெற்றோர் புகார்

திண்டிவனம், அக். 12: திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டிவனம் அடுத்த வேம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவபெருமாள் மனைவி ராஜகுமாரி (23). இவர்களுக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் 3 மாத கர்ப்பிணியான ராஜகுமாரிக்கு, இருதய நோய் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு ராஜகுமாரிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் திண்டிவனத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் தனியார் மருத்துவமனையில், அவருக்கு இருதய நோய் இருப்பதால், அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி அறிவுறுத்தியுள்ளனர். திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சையில் இருந்த போது ராஜகுமாரி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த பெண்ணின் உறவினர்கள், திண்டிவனம் அரசு மருத்துவமனையில் நேற்று திரண்டனர். பின்னர் பெண்ணின் பெற்றோர் வெள்ளிமேடுபேட்டை காவல் நிலையத்தில் மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இளம்பெண் சாவு சாவில் சந்தேகம் பெற்றோர் புகார் appeared first on Dinakaran.

Tags : Tindivanam Government Hospital ,Tindivanam ,Dinakaran ,
× RELATED திண்டிவனம் நீதிமன்றத்தில் பரபரப்பு...