போபால்: இந்துமத நம்பிக்கைப்படி புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய பட்சம் என்ற 15 நாட்கள் ஒரு குடும்பத்தினரின் முன்னோர்களை வழிபடும் காலமாகும். அப்போது நதிக்கரைகளுக்கு சென்று தங்களது முன்னோர்களுக்கு சிரார்த்த தர்ப்பண பூஜை நிறைவேற்றுவது இந்துக்களின் வழக்கம். அவ்வகையில் மபி முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் சிரார்த்த பூசை செய்யும் படத்தை காங்கிரஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு விமர்சித்திருந்தது. காங்கிரஸ் சிவராஜ்சிங் சவுகானை டிவிட்டரில் மட்டமாக விமர்சித்ததாக பாஜவினர் கொந்தளித்துள்ளனர். இதுபற்றி சிவராஜ்சிங் கூறும்போது, ‘அவர்கள் மீது நான் இரக்கப்படுகிறேன். இந்த காரியத்திற்காக கடவுள் அவர்களை மன்னிக்க மாட்டார். சிரார்த்தம் என்பது ஒருவரது பாவங்களை போக்குவதற்காக என்பதால் காங்கிரஸ் தனது பாவங்களை அகற்ற சிரார்த்தம் செய்து கொள்ளட்டும். அதன் மூலம் காங்கிரசாருக்கு நல்ல புத்தி வரட்டும்’ என்று காட்டமாக பதிலளித்துள்ளார்.
The post சிவராஜ்சிங்கின் தர்ப்பண பூஜை சமூக வலைதளத்தில் காங். விமர்சனம்: பாஜ கடும் கண்டனம் appeared first on Dinakaran.