×

திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களைச் சார்ந்த 10 அமராவதி பழைய வாய்க்கால்களின் பாசனப் பகுதிகளில் உள்ள நிலங்களுக்கு தண்ணீர் திறக்க ஆணை

சென்னை: திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களைச் சார்ந்த 10 அமராவதி பழைய வாய்க்கால்களின் (அலங்கியம் முதல் கரூர் வலது கரை வரை) பாசனப் பகுதிகளில் உள்ள நிலங்களுக்கு, 12.10.2023 முதல் 27.10.2023 வரை 15 நாட்களுக்கு, அமராவதி ஆற்று மதகு வழியாக 1503.36 மில்லியன் கன அடிக்கு மிகாமலும், திருப்பூர் மாவட்டத்திலுள்ள புதிய பாசன நிலங்களுக்கு 12.10.2023 முதல் 27.10.2023 வரை 15 நாட்களுக்கு, அமராவதி பிரதானக் கால்வாய் வழியாக 570.24 மில்லியன் கன அடிக்கு மிகாமலும், ஆக மொத்தம் 2073.60 மில்லியன் கன அடிக்கு மிகாமல், அமராவதி அணையிலிருந்து, நிலையிலுள்ள பயிர்களைக் காப்பாற்றும் பொருட்டு சிறப்பு நனைப்புக்கும், குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டும், தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களிலுள்ள 47,117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

The post திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களைச் சார்ந்த 10 அமராவதி பழைய வாய்க்கால்களின் பாசனப் பகுதிகளில் உள்ள நிலங்களுக்கு தண்ணீர் திறக்க ஆணை appeared first on Dinakaran.

Tags : Tirupur and ,Karur ,Chennai ,Karur districts ,Alangiyam ,
× RELATED செங்குந்தபுரம் செல்லும் சாலையில்...