×

கேரளாவில் இருந்து பெங்களூரு சென்றபோது டேங்கர் லாரி மீது கார் மோதி 2 வாலிபர்கள் பரிதாப பலி: நண்பர்கள் 3 பேர் படுகாயம்

கிருஷ்ணகிரி: கேரள மாநிலம் கொல்லம் அடுத்த மன்னடி பகுதியை சேர்ந்த சந்தீப் (26), அமான் (26), கேரளா அடூர் பகுதியை சேர்ந்த ரியாஸ் (24), நித்துஜிரால் (26), கிருஷ்ணன் சந்த் (22) ஆகிய 5 பேரும் பெங்களூரில் உள்ள கல்வி சம்பந்தமான நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளா சென்றனர். பின்னர் நேற்றிரவு மீண்டும் காரில் பெங்களூருவுக்கு புறப்பட்டனர். இன்று காலை 7 மணியளவில் கிருஷ்ணகிரி- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் குருபரப்பள்ளி புளியரசி மேடு என்ற பகுதியில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென முன்னால் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது கார் பயங்கரமாக மோதியதில் நொறுங்கியது. காரில் இருந்த 5 பேரும் இடிபாடுகளில் சிக்கி கூச்சலிட்டனர்.

இதை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து, குருபரப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று காரில் இருந்தவர்களை மீட்டனர். அப்போது சம்பவ இடத்திலேயே சந்தீப், அமான் ஆகியோர் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. காயமடைந்த ரியாஸ், மித்துஜலால், கிருஷ்ணன் ஆகியோரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த 2 உடல்கள் பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்தில் சிக்கிய கார் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. இந்த விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

The post கேரளாவில் இருந்து பெங்களூரு சென்றபோது டேங்கர் லாரி மீது கார் மோதி 2 வாலிபர்கள் பரிதாப பலி: நண்பர்கள் 3 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Kerala ,Bengaluru ,Krishnagiri ,Sandeep ,Aman ,Mannadi ,Kollam, Kerala ,Adur ,
× RELATED “வெறுப்புக்கு எதிராக நான் வாக்களித்துவிட்டேன்; நீங்களும்…”: பிரகாஷ் ராஜ்