×

பொய்கை மாட்டு சந்தையில் கால்நடைகள் வரத்து குறைவால் விற்பனை சரிவு

*₹65 லட்சத்துக்கு வர்த்தகம்

வேலூர் : வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தையில் கால்நடைகளின் வரத்து குறைந்து காணப்பட்டதால் வர்த்தகமும் ₹65 லட்சம் என்று சரிவை கண்டது.
தமிழகத்தின் முக்கிய கால்நடை வாரச்சந்தைகளில் பொய்கை மாட்டுச்சந்தை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையன்றும் நடைபெறும் இந்த சந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் அண்டை மாநிலமான ஆந்திர மாநிலம் வி.கோட்டா, குப்பம், பலமநேர், புங்கனூர் என பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகத்தின் கோலார் மாவட்டத்தில் இருந்தும் கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இந்நிலையில் கடந்த வாரங்களை விட நேற்று கால்நடைகளின் வரத்து குறைந்து காணப்பட்டது.

சந்தையில் கறவை மாடுகள், ஜெர்சி கலப்பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகள், எருமைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன.
கால்நடைகள் வரத்து குறைந்ததால் அதற்கேற்ப வர்த்தகமும் நேற்று சுமார் ₹65 லட்சத்தில் இருந்து 70 லட்சம் வரைதான் என்று வியாபாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக அவர்கள் மேலும் கூறும்போது, ‘மழைக்காலம் தொடங்க உள்ளதால் தீவனப்பற்றாக்குறை இந்த சீசனில் இருக்காது. எனவே யாரும் கறவை மாடுகளையோ, உழவு மாடுகளையோ விற்க முன்வர மாட்டார்கள்.
இதுதான் கால்நடைகள் வரத்து குறைவுக்கு காரணம்’ என்றனர்.

The post பொய்கை மாட்டு சந்தையில் கால்நடைகள் வரத்து குறைவால் விற்பனை சரிவு appeared first on Dinakaran.

Tags : Poigai ,Vellore ,Poikai Cattle Market ,
× RELATED சொகுசு காரில் வந்து வீட்டில் ஆடுகள் திருட்டு: வீடியோ வைரல்