×

மாவட்டத்தில் 2 போலீஸ் எஸ்ஐ உட்பட 4 போலீசார் இடமாற்றம்: எஸ்பி அதிரடி நடவடிக்கை

 

ஈரோடு, அக்.11: ஈரோடு மாவட்டத்தில் 2 போலீஸ் எஸ்ஐக்கள் உட்பட 4 பேர் பணியிட மாற்றம் செய்து ஈரோடு எஸ்பி ஜவகர் நடவடிக்கை எடுத்துள்ளார். ஈரோடு மாவட்டம், காஞ்சிக்கோயில் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்ஐ.யாக பணியாற்றுபவர் துரைசாமி. இவர் காஞ்சிக்கோயில் பகுதியில் உள்ள கோயில் பிரச்சனையில் முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இதேபோல், கருங்கல்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் தனிப்பிரிவு தலைமைக்காவலராக(ஏட்டு) பணியாற்றுபவர் நித்தியானந்தம். இவர், கருங்கல்பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியில் நடக்கும் சட்ட விரோத செயல்கள் குறித்து முறையாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து காஞ்சிக்கோவில் எஸ்ஐ துரைசாமி, கருங்கல்பாளையம் தனிப்பிரிவு ஏட்டு நித்தியானந்தம் ஆகிய இருவரையும் மாவட்ட ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து ஈரோடு எஸ்பி ஜவகர் உத்தரவிட்டார்.

The post மாவட்டத்தில் 2 போலீஸ் எஸ்ஐ உட்பட 4 போலீசார் இடமாற்றம்: எஸ்பி அதிரடி நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : SIs ,Erode ,Dinakaran ,
× RELATED ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே வாக்கு...