×

ஒன்றிய அரசு கல்வி நிறுவனங்களில் படிக்கும் சீர் மரபினர் மாணவர்களுக்கு கல்வி உதவி

 

ஈரோடு, அக்.11: மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபின மாணவ, மாணவிகள் 2023-24ம் கல்வி ஆண்டுக்கான புதிய மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். இவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும் என தமிழ்நாடு அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கு விண்ணப்பிக்க கீழ்கண்ட முகவரியில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம் அல்லது கலெக்டர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களை அணுகி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மாணவ, மாணவிகள் இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தை பரிந்துரை செய்து, கீழ்கண்ட முகவரிக்கு பூர்த்தி செய்து புதுப்பித்தல் விண்ணப்பங்களை 15.12.2023-க்குள்ளும்,

புதிய விண்ணப்பங்களை 15.1.2024-க்குள்ளும் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககம், எழிலகம் இணைப்பு கட்டடம், 2வது தளம், சேப்பாக்கம், சென்னை-05. தொலைபேசி எண் – 044-29515942 என்னும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

The post ஒன்றிய அரசு கல்வி நிறுவனங்களில் படிக்கும் சீர் மரபினர் மாணவர்களுக்கு கல்வி உதவி appeared first on Dinakaran.

Tags : Erode ,IIT ,IIM ,IIIT ,NIT ,
× RELATED ஈரோடு மேற்கு தொகுதி வாக்கு இயந்திர...