×

உசிலம்பட்டியில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

 

உசிலம்பட்டி, அக். 11: உசிலம்பட்டியில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் உசிலம்பட்டி வட்டாட்சியர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உசிலம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். மேலும் இந்த கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில், உசிலம்பட்டி பகுதியில் உள்ள விளைநிலங்களை அடிக்கடி காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருவதாகவும்,

காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்தி விவசாயிகளை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். உசிலம்பட்டி கிராமப்புற பகுதிகளுக்கு சென்று வந்த அரசு பஸ்கள் தற்போது முறையாக இயக்கப்படுவதில்லை. முறையாக அரசு பேருந்துகளை இயக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றனர். மேலும் விவசாயிகளின் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றுவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

The post உசிலம்பட்டியில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Ucilampati ,USILAMPATI ,OCT ,MADURAI DISTRICT ,USILAMPATI DISTRICT ,
× RELATED டிடிவி தினகரன் முகத்தை குக்கருடன்...