×

போடி அருகே 9 மூட்டை புகையிலை பொருட்கள் பறிமுதல்கடைக்காரர் கைது

 

போடி, அக். 11: போடி அருகே, பெட்டிக்கடையில் பதுக்கி வைத்திருந்த 9 மூட்டை புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, கடைக்காரரை கைது செய்தனர். போடி அருகே, மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சியில் உள்ள மனோரமா நகரைச் சேர்ந்தவர் ஜெயவேல் (42). இவர், அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். இந்த கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக போடி தாலுகா போலீசாருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து நேற்று முன்தினம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்தப் பெட்டிக்கடையில் சோதனை செய்தனர். அப்போது, விற்பனைக்காக கடையில் புகையிலை பொருட்கள் மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து 9 மூட்டையில் இருந்த புகையிலை ெபாருட்களை போலீசார் பறிமுதல் செய்து, ஜெயவேலை கைது செய்தனர்.

The post போடி அருகே 9 மூட்டை புகையிலை பொருட்கள் பறிமுதல்கடைக்காரர் கைது appeared first on Dinakaran.

Tags : BODI ,Bodhi ,Dinakaraan ,
× RELATED வாலிபருக்கு அரிவாள் வெட்டு