- தகவல் உரிமை சட்டம் விழிப்புணர்வு பேரணி
- மணப்பாறை
- தகவல் அறியும் உரிமை
- குள்ளன்குறிச்சி
- திருச்சி...
- தின மலர்
மணப்பாறை: துவரங்குறிச்சி மற்றும் மணப்பாறை ஆகிய பகுதிகளில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி விழிப்புணர்வு பேரணி நடந்தது. திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி பொன்னம்பட்டி பேரூராட்சி தலைவர் சரண்யா நாகராஜ், மற்றும் நகரச் செயலாளர் மும்பை நாகராஜ், பொன்னம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் சுரேஷ் ஆகியோர் தலைமையில் நேற்று துவரங்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் மாணவர்கள் இணைந்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொன்னம்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக துவரங்குறிச்சியின் முக்கிய வீதிகள் வழியாக சென்று திரும்பினர்.
The post தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.