×

இலங்கை படகு ஊடுருவல் 2 பேர் ஓட்டம்

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் தீவு பகுதியில், ‘சாஹர் கவாச்’ என்னும் தீவிரவாத தடுப்பு மற்றும் கடலோர பாதுகாப்பு ஒத்திகை நேற்று நடந்தது. இந்த சமயத்தில் ராமேஸ்வரம் அருகே, மண்டபம் முனைக்காடு கடற்கரை பகுதிக்கு நேற்று அதிகாலை 4 மணியளவில் இலங்கையைச் சேர்ந்த பைபர் கிளாஸ் படகு ஒன்று வந்தது. சம்பவ இடத்திற்கு வந்த மண்டபம் மரைன் போலீசார், படகை மீட்டு சோதனை செய்தனர். படகில் இன்ஜின், டீசல் கேன், பெட்டியில் சிறிது மீன்கள் இருந்தன. விசாரணையில், இலங்கை படகு ராமேஸ்வரம் ஓலைக்குடா நரிக்குழி பகுதியில் உள்ள கலங்கரை விளக்கம் வழியாக மண்டபம் கடல்பகுதிக்கு சென்றது தெரிய வந்தது. இலங்கை பள்ளிமுனையை சேர்ந்த ஜான்சன் என்பவருக்கு சொந்தமான படகு என்பதும், படகில் வந்த இருவர் முள் காட்டுக்குள் சென்று தலைமறைவானதும் தெரிய வந்தது. அவர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

The post இலங்கை படகு ஊடுருவல் 2 பேர் ஓட்டம் appeared first on Dinakaran.

Tags : Rameswaram ,Ramanathapuram district ,Rameswaram island ,Gavach ,
× RELATED தேங்கி கிடக்கும் பாலித்தீன் குப்பைகள் அழகை இழந்து வரும் அரியமான் கடற்கரை