சென்னை: கள்ளுக்கு விதிக்கப்பட்ட தடையை திரும்ப பெற வேண்டும், இல்லையெனில் ஜனவரி 21ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் நிருபர்களை சந்தித்தனர். அப்போது இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி நிருபர்களிடம் கூறியதாவது: காவிரி நீர் விவகாரம் தொடர்பாக அதிமுக, திமுக இரண்டு கட்சிகளுமே உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்து, தினந்தோறும் நீர்பங்கீடு என்ற அம்சத்தை தீர்ப்பில் இடம்பெற செய்ய வேண்டும். இதுவே நிரந்தர தீர்வாக அமையும். இல்லையெனில் காவிரி நீர் பங்கீடு பிரச்னை இருந்து கொண்டே இருக்கும்.
தமிழக விவசாயிகளுக்கு தேவையான தண்ணீரை கர்நாடக அரசிடம் இருந்து தமிழக அரசு பெற்றுத்தர வேண்டும். மேலும் கள்ளுக்கு விதிக்கப்பட்ட தடையை திரும்ப பெற வேண்டும், இல்லையெனில் ஜனவரி 21ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.
The post கள்ளுக்கு விதித்த தடையை நீக்க கோரி ஜனவரி 21ம் தேதி முதல் தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்: கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி எச்சரிக்கை appeared first on Dinakaran.