×

செல்போனில் ஐஏஎஸ் அதிகாரிபோல் பேசி சினிமா உதவி இயக்குநரை மிரட்டிய ஆசாமி கைது

 

திருவொற்றியூர்: சென்னை கோபாலபுரத்தை சேர்ந்தவர் செந்தில் (40). உதவி இயக்குநராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 6ம்தேதி இவரை செல்போனில் தொடர்புகொண்ட மர்ம நபர், தான் ஐஏஎஸ் அதிகாரி என்றும், நான் அனுப்பும் 2 நபர்களுக்கு சினிமாவில் வாய்ப்பு வாங்கி தரவேண்டும், இல்லாவிட்டால் சும்மா விட மாட்டேன் என மிரட்டியுள்ளார். இதுகுறித்து ராயபுரம் காவல் நிலையத்தில் செந்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அந்த செல்போன் எண்ணை வைத்து விசாரித்தனர்.

அதில், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த செந்தில்நாதன் (44). என்பவர் ஐஏஎஸ் அதிகாரிபோல் பேசி மிரட்டியது தெரியவந்தது. இதனையடுத்து விழுப்புரத்திற்கு விரைந்து சென்ற போலீசார், செந்தில்நாதனை நேற்று கைது செய்தனர். இவர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் பஜனை பாடும் தொழில் செய்து கொண்டே குற்றசம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை சிறையில் அடைத்தனர்.

The post செல்போனில் ஐஏஎஸ் அதிகாரிபோல் பேசி சினிமா உதவி இயக்குநரை மிரட்டிய ஆசாமி கைது appeared first on Dinakaran.

Tags : IAS ,Senthil ,Gopalapuram, Chennai ,
× RELATED செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கக்...