×

படியில் நின்ற பள்ளி மாணவியை சரமாரியாக தாக்கிய நடத்துனர்: போலீசார் விசாரணை

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில், பள்ளி மாணவியை நடத்துனர் ஒருவர் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி அரசு மருத்துவமனை எதிரே அரசினர் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், அப்பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாமல்லபுரத்தை சேர்ந்த மாணவி ஒருவர் நேற்று மாலை சிறப்பு வகுப்பு முடிந்து அரசு மருத்துவமனைக்கு அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்து மாமல்லபுரம் செல்வதற்கு ஒரு மாநகர பேருந்தில் ஏறி படியில் நின்றுள்ளார்.

இதைப் பார்த்த, அந்த பஸ் கண்டக்டர் திடீரென அந்த மாணவியை சரமாரியாக தாக்கி பஸ்சில் இருந்து இறக்கி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மாணவி அழுது கொண்டே வீட்டிற்கு வந்து நடந்தவற்றை தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். தொடர்ந்து, மாணவியின் தந்தை தனது உறவினர்களுடன் மாமல்லபுரம் பஸ் நிலையம் வந்து விசாரித்த போது, அந்த பேருந்து சென்று விட்டதாக சக கண்டக்டர்கள் கூறினர்.

பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை தனது மகளை அழைத்து கொண்டு சிறப்பு வகுப்பு முடிந்து பேருந்தில் ஏறிய எனது மகளை சரமாரியாக தாக்கிய கண்டக்டரை அடையாளம் கண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாமல்லபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரை, பெற்றுக் கொண்ட போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. சிறப்பு, வகுப்பு முடிந்து மாநகர பஸ்சில் ஏறிய பள்ளி மாணவியை கண்டக்டர் ஒருவர் சரமாரி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post படியில் நின்ற பள்ளி மாணவியை சரமாரியாக தாக்கிய நடத்துனர்: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,Pooncheri Govt ,Dinakaran ,
× RELATED மாமல்லபுரம் இசிஆரில் விபத்தை குறைக்க...