×

மரக்கன்றுகள் நடும் விழா

மதுராந்தகம்: மெய்யூர் பகுதியில் பாஜ சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த மெய்யூர் பகுதியில் பாஜ சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று முன்தினம் நடந்தது. செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவர் மோகன்ராஜா ஆலோசனையின்படி, மெய்யூர் ஊராட்சியில் தென்னை, பலா உள்ளிட்ட 100 மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில், மதுராந்தகம் வடக்கு ஒன்றிய துணை தலைவர் மெய்யூர் தட்சிணாமூர்த்தி ராஜா, வர்த்தக அணி தலைவர் சிவகுமார், இளைஞரணி தலைவர் அத்தியூர் பச்சையப்பன், மதுராந்தகம் வடக்கு ஒன்றிய கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post மரக்கன்றுகள் நடும் விழா appeared first on Dinakaran.

Tags : Madhurandhakam ,BJP ,Meiyur ,Narendra Modi ,Chengalpattu ,Sapling Planting Ceremony ,
× RELATED அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அரசு...