×

மிசோரமில் 5 சுயேச்சை எம்.எல்.ஏக்கள் ராஜினாமா

ஐஸ்வால்: இந்தியாவின் வடகிழக்கு மாநிலம் மிசோரமில், மிசோ தேசிய முன்னணியின் தலைவர் சோரம்தாங்கா முதல்வராக உள்ளார். அடுத்த மாதம் 7ம் தேதி அங்கு சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில், நேற்று வி.எல்.சைத்தன்சமா, வன்லால்த்லானா, லால்சுவான்தங்கா, லால்சவிவுங்கா, வன்லால்லானா ஆகிய ஐந்து சுயேச்சை எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். கடந்த தேர்தலில் அவர்கள் போட்டியிட்டபோது அவர்களது ஜோரம் மக்கள் கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படவில்லை. தற்போது கட்சியில் சீட்டு பெறுவதற்காக முன்னதாகவே தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

The post மிசோரமில் 5 சுயேச்சை எம்.எல்.ஏக்கள் ராஜினாமா appeared first on Dinakaran.

Tags : Mizoram ,Aizawl ,India ,Mizo National Front ,Soramthanga ,chief minister ,Dinakaran ,
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...