×

விருதுநகர் மாவட்டம், தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து: ஆறுதல் மற்றும் நிதியுதவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை: விருதுநகர் மாவட்டத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை தமிழ்நாடு முதலமைச்சர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது; விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டம் கங்கர்செவல் கிராமத்திலுள்ள தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் 3-10-2023 அன்று ஏற்பட்ட தீவிபத்தில் மூன்று தொழிலாளர்களுக்கு கொடுங்காயம் ஏற்பட்டு மேல்சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் கங்கர்செவல், க.லட்சுமியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன், த/பெ. பிலாவடியான் (வயது 42) மற்றும் ராஜா, த/பெ.வர்கீஸ் (வயது 38) ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி கணேசன், த/பெ. பிலாவடியான் 7-10-2023 அன்றும், ராஜா. த/பெ. வர்கீஸ் இன்றும் (10-10-2023) உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக்கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் முத்தம்மாள், க/பெ மாரிமுத்து என்பவருக்கு ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

The post விருதுநகர் மாவட்டம், தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து: ஆறுதல் மற்றும் நிதியுதவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Virudunagar District ,Chief Minister ,Comfort ,Funding ,Bu. c. Stalin ,Chennai ,Private Fireworks Plant ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...