சென்னை: கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு நிரந்தர தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இடைக்கால தடையை நிரந்தர தடையாக மாற்றி ஐகோர்ட் உத்தரவிட்டது. தன்னை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடைக்கோரி எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது. ஆவணங்களை பதிவு செய்வதற்காக வழக்கின் விசாரணை நவம்பர் 9க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
The post கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு நிரந்தர தடை விதித்தது ஐகோர்ட்..!! appeared first on Dinakaran.