×

சென்னை அண்ணா சாலையில் நடந்த மோதல் விவகாரத்தில் கைதான கல்லூரி மாணவர் ஜாமினில் விடுவிப்பு..!!

சென்னை: சென்னை அண்ணா சாலையில் நடந்த மோதல் விவகாரத்தில் கைதான கல்லூரி மாணவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். சென்னை அண்ணாசாலை சர்ச் பார்க் பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே நேற்று இரு கல்லூரி மாணவர்கள் மோதிக்கொண்டனர். மோதல் தொடர்பாக கைதான நந்தனம் அரசு கல்லூரி மாணவர், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதித்துறை நடுவர் வேல்ராஜ், மாணவர் தேவராஜை ஜாமினில் விடுவித்தார்.

The post சென்னை அண்ணா சாலையில் நடந்த மோதல் விவகாரத்தில் கைதான கல்லூரி மாணவர் ஜாமினில் விடுவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Chennai Anna Road ,CHENNAI ,Anna Road ,Chennai Annasalai Church ,Chennai Annasalai College ,
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...