×

கல்லூரிகளுக்கிடையேயான பூப்பந்தாட்டப் போட்டி பழநியாண்டவர் மகளிர் கல்லூரி அணி வெற்றி

பழநி, அக். 10: கல்லூரிகளுக்கிடையேயான பூப்பந்தாட்டப் போட்டியில் பழநியாண்டவர் மகளிர் கல்லூரி அணி வெற்றி பெற்றுள்ளது. கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக அளவிலான பூப்பந்தாட்டப் போட்டிகள் சின்னக்கலையம்புத்தூர் பழநியாண்டவர் மகளிர் கல்லூரியில் 2 நாட்கள் நடந்தன. போட்டியில் திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் இருந்து 6 மகளிர் கல்லூரி அணிகள் பங்கேற்றன. பல்வேறு பிரிவுகளாக நடந்த போட்டிகளில் இறுதி போட்டிக்கு திண்டுக்கல் எம்விஎம் கலைக் கல்லூரி அணியும், பழநியாண்டவர் மகளிர் கல்லூரி அணியும் மோதின.

இதில் பழநியாண்டவர் மகளிர் கல்லூரி அணி வெற்றி பெற்று முதலிடம் பிடித்தது. எம்விஎம் கலைக் கல்லூரி அணி 2ம் இடம் பிடித்தது. ஜெயராஜ் அன்னபாக்கியம் அணி 3ம் இடம் பிடித்தது. தேனி நாடார் சரஸ்வதி கல்லூரி அணி 4ம் இடம் பிடித்தது. முதலிடம் பிடித்து வெற்றி பெற்ற பழநியாண்டவர் மகளிர் கல்லூரி அணி மாணவிகளை பழநி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, கல்லூரியின் முதல்வர் புவனேஸ்வரி, தெரசா பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநர் ராஜம், பழநியாண்டவர் கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் கலையரசி உள்ளிட்டோர் பாராட்டி வாழ்த்தினர்.

The post கல்லூரிகளுக்கிடையேயான பூப்பந்தாட்டப் போட்டி பழநியாண்டவர் மகளிர் கல்லூரி அணி வெற்றி appeared first on Dinakaran.

Tags : Palaniyandavar Women's College Team ,Inter- ,Badminton Tournament ,Palani ,Mother Teresa ,Kodaikanal ,Inter-College Badminton Tournament ,Dinakaran ,
× RELATED உபெர் கோப்பை பேட்மின்டன்: கால் இறுதியில் இந்தியா