மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள நெடுவாக்கோட்டை மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் அருணாச்சலம் (45). சிங்கப்பூரில் கட்டுமான நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி லாவண்யா (35). கடந்த 28ம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கிராமத்தில் உள்ள தனது தாயாரை பார்க்க சென்றிருந்தார். அப்போது, மறுநாள் இரவு வீட்டுக்கு வந்தபோது வீட்டின் பூட்டை உடைத்து, இரண்டு பீரோக்களில் வைக்கப்பட்டிருந்த 52 பவுன் நகைளை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டதாக மன்னார்குடி நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின்பேரில் குற்றவாளிகளை பிடிக்க திருவாரூர் மாவட்ட எஸ்பி சுரேஷ்குமார் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதையடுத்து தனிப்படை போலீசார் கொள்ளை நடந்த வீடு, அப்பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். விசாரணையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய புதுச்சேரி மாநிலம், பாகூரை சேர்ந்த பிரபாகரன் (35), காரைக்கால் அடுத்த திருப்பட்டினத்தை சேர்ந்த ராஜ்மோகன் (38), திருவாரூர் மாவட்டம் வடுவூரை சேர்ந்த முத்து ஆனந்த் (39) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அருணாச்சலம் வீட்டிலிருந்து 1 பவுன் செயின், 2 கிராம் தங்க மோதிரம், வெள்ளி காமாட்சி விளக்கு ஒன்று, ஒரு ஜோடி வெள்ளி கொலுசு, 2 செல்போன்கள் மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மட்டும் திருடியதாக தெரிவித்தனர்
The post மன்னார்குடியில் 10 கிராம் மட்டுமே திருடுபோன நிலையில் 52 பவுன் திருடுபோனதாக பொய் புகார்: பெண் கைது appeared first on Dinakaran.