×

அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் தொழில் முனைவோர்களுக்கு மானியத்துடன் கடனுதவி

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் தொழில் முனைவோர்களுக்கு மானியத்துடன் கடனுதவி கள் வழங்கப்படுகிறது என மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார். இது குறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு பட்டியலினம் மற்றும் பழங்குடியினர் பிரிவு தொழில் முனைவோருக் கென பிரத்யேக சிறப்பு திட்டமாக அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஆர்வம் உள்ள புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் விரிவாக்கம் செய்ய விரும்பும் தொழில் முனைவோர் நேரடி வேளாண்மை தவிர்த்த உற்பத்தி, வணிகம் மற்றும் சேவை சார்ந்த எந்த தொழில் திட்டத்துக்கும் கடனுதவியோடு இணைந்த மானியம் வழங்கப்படும்.

The post அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் தொழில் முனைவோர்களுக்கு மானியத்துடன் கடனுதவி appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Dinakaran ,
× RELATED கல்குவாரி நீரை பயன்படுத்த நடவடிக்கை