×

வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றியம் பேரூர் திமுக சார்பில், வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. உத்திரமேரூர் செயலாளர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் பாரிவள்ளல், தலைமை செயற்குழு உறுப்பினர் நாதன், பொதுக்குழு உறுப்பினர் பொன்.சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், காஞ்சிபுரம் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் எம்பி செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். அப்போது, வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். மேலும், வாக்குசாவடி முகவர்கள் அனைவரும் திமுக அரசின் சாதனைகளை பொதுமக்களுக்கு எடுத்துரைத்து வாக்குகளை தீவிரமாக சேகரிக்க வேண்டும் என அறிவுறுத்தினர். இக்கூட்டத்தில் உத்திரமேரூர் ஒன்றிய பேரூர் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Uttara Merur ,Uttara Merur Union Perur DMK ,Dinakaran ,
× RELATED இணையவழியில் ஆவணங்கள் பெற பழங்குடியினருக்கு சிறப்பு பயிற்சி முகாம்