×

சிக்கிமில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 105 பேரை தேடும் பணி தீவிரம்

காங்டாக்: சிக்கிமில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மாயமான 105 பேரை தேடும் பணி முழுவீச்சில் நடந்து வருகின்றது. சிக்கிம் மாநிலத்தில் கடந்த வாரம் மேகவெடிப்பு காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக ஏராளமான வீடுகள் மற்றும் ராணுவ முகாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. சுமார் 3,432 வீடுகள் நாசமடைந்தது.

5327 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 10 பேர் ராணுவ வீரர்கள். மேலும் காணாமல் போன 105 பேரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்திய விமானப்படையினர் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர். லாச்சன் பகுதியில் சிக்கி தவித்த 7 சிறுவர்கள் உட்பட 77 சுற்றுலா பயணிகள் மீட்கப்பட்டனர்.

The post சிக்கிமில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 105 பேரை தேடும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Sikkim ,Gangtok ,Dinakaran ,
× RELATED பாஜ கூட்டணியில் இருந்து விலகல் சிக்கிம் முதல்வர் தமாங் 2 இடங்களில் போட்டி