×

மர்ம காய்ச்சலுக்கு மாணவன் சாவு

திங்கள்சந்தை: இரணியல் அருகே ஆலங்கோடை சேர்ந்தவர் குமார் (45). அவரது மகன் ஆதித்யன் (16). மாங்குழியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். சில தினங்களுக்கு முன் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஆதித்யனை பெற்றோர் நெய்யூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஆதித்யன் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். திங்கள்சந்தை, இரணியல் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே மர்ம காய்ச்சல் பரவி வருவதாக கூறப்படுகிறது.

The post மர்ம காய்ச்சலுக்கு மாணவன் சாவு appeared first on Dinakaran.

Tags : Alangode ,Iranial ,Adityan ,Manguzhi ,
× RELATED இரணியல் அருகே நள்ளிரவில் குளத்தில் கவிழ்ந்த லாரி