×

சென்னை கொரட்டூரில் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி மேற்கொண்டவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு..!!

சென்னை: சென்னை கொரட்டூரில் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி மேற்கொண்டவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்த யோகேஷ் என்பவர் ஜிம் டிரெய்னராக இருந்தார். இவருக்கு திருமணமாகி இரண்டு வயதில் குழந்தை உள்ளது. ஆணழகன் போட்டியில் கலந்து கொள்வதற்காக தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

இவர் கொரட்டூரில் உள்ள உடற்பயிற்சி மையத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது உடல் சோர்வுடன் காணப்பட்டதாக தகவல் தெரியவந்துள்ளது. உடற்பயிற்சி செய்து விட்டு குளிக்கச் சென்றுள்ளார். பின்னர் நீண்ட நேரம் வெளியில் வராததால், அங்குள்ளவர்கள் குளியலறைக்கு சென்று பார்த்தபோது அவர் மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.

இதனையடுத்து உடனடியாக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர். அடுத்த மாதம் நடைபெற உள்ள ஆணழகன் போட்டியில் பங்கேற்பதற்காக கடுமையான பயிற்சி மேற்கொண்டபோது விபரீதம் ஏற்பட்டுள்ளது. மேலும் இது குறித்து போலீசார் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சென்னை கொரட்டூரில் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி மேற்கொண்டவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Koratur, Chennai ,Chennai ,Yogesh ,Ambatore ,
× RELATED போதையில் தகராறு செய்த கணவர் அடித்து கொலை? மனைவியிடம் போலீஸ் விசாரணை