×

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் ஆட்டோ மீது பேருந்து மோதியதில் 4 பேர் உயிரிழப்பு..!!

ஆந்திரா: ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் ஆட்டோ மீது பேருந்து மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். கடப்பா ஆசாத் நகர் காலனியில் வசிப்பவர்கள் ஆட்டோவில் பயணித்தபோது, ​​எர்ரகுண்ட்லா அருகே விபத்து ஏற்பட்டது. கடப்பாவை சேர்ந்த 11 பேர் புரோட்டூரில் இருந்து ஆட்டோவில் சென்று உள்ளனர்.

இந்நிலையில் ஆட்டோ லாரியை கடக்க முயன்றபோது, ​​எதிரே எர்ரகுண்ட்லாவில் இருந்து வந்த பேருந்து மோதியது. இந்த விபத்தில் பெண் டிரைவர் உட்பட ஆட்டோவில் பயணம் செய்த 4 பேர் பலியாகினர். இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த முஹம்மது (25), ஷாகிர் (10), ஹசீனா (25), ஆமினா (20) ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த 6 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். தகவல் அறிந்து வந்த ஜம்மலமடுகு டிஎஸ்பி நாகராஜூ, எர்ரகுண்ட்லா தாசில்தார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் ஆட்டோ மீது பேருந்து மோதியதில் 4 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Kappa district, ,AP ,Andhra Pradesh ,Kappa district, Andhra Pradesh ,Kadapa Azad Nagar ,
× RELATED ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் உரிய...