×

வன்னியர் இட ஒதுக்கீட்டை சாதி பிரச்சினையாக பார்க்க கூடாது: அன்புமணி பேட்டி

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அன்புமணி ராமதாஸ்; வன்னியர் இட ஒதுக்கீட்டை சாதி பிரச்சினையாக பார்க்க கூடாது, சமூக நீதி பிரச்சினையாக பார்க்க வேண்டும். கல்வியில் கடந்த 30 ஆண்டுகளாக வட மாவட்டங்கள் பின் தங்கியுள்ளது. நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 10.5% இட ஒதுக்கீடு குறித்து தீர்மானம் நிறைவேற்ற, முதலமைச்சரை சந்தித்து வலியுறுத்தினோம். இது குறித்து ஆலோசித்து விட்டு கூறுவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தினால்தான் இடஒதுக்கீட்டை பாதுகாக்க முடியும்.  தமிழ்நாட்டில் 22 மாவட்டங்கள் காவிரி நீரை நம்பிதான் உள்ளன எனவும் கூறினார்.

The post வன்னியர் இட ஒதுக்கீட்டை சாதி பிரச்சினையாக பார்க்க கூடாது: அன்புமணி பேட்டி appeared first on Dinakaran.

Tags : WANNIER ,ANBUMANI ,CM ,President ,Anbunmani Ramadas ,Stalin ,Anbunmani ,
× RELATED “தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத்...