×

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தொடங்கியது..!!

சென்னை: எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தொடங்கியுள்ளது. எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கையில் மாற்றமில்லை என சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்தார். ஏற்கனவே இருக்கை தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டுவிட்டது; அதே நிலை தொடரும். எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை மாற்றம் தொடர்பாக இப்போது ஏதும் கோரிக்கை இல்லை என தெரிவித்தார்.

ஒபிஎஸ்க்கு பதிலாக ஆர்.பி.உதயகுமாரை சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவராக நியமிக்க வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தி வருகிறது எனவும் அப்பாவு தெரிவித்தார். இந்நிலையில் பழனிசாமி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தொடங்கியது. தலைமைச் செயலகத்தில் உள்ள எதிர்க்கட்சி அலுவலக அறையில் கூட்டம் நடைபெற்றது. சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில் அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகருடன் சந்திப்பு

சட்டப்பேரவை சபாநாயகருடன் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து பேசினர். எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோர் சந்தித்தனர். எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்க சபாநாயகரிடம் வலியுறுத்தினர்.

The post எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Tags : Supreme Assembly ,Edabadi Palanisami ,Edabadi ,Pannisami ,
× RELATED சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர்...