×

சிக்கிம் வெள்ளப்பெருக்கில் பலி எண்ணிக்கை 82 ஆக அதிகரிப்பு.. 140 பேர் மாயம்.. ஒரு வாரத்திற்கு பிறகு 56 பேர் உயிருடன் மீட்பு!!

கேங்டாக்: சிக்கிமில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் பலி எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது. வடகிழக்கு மாநிலமான சிக்கிமில், லாச்சென் பள்ளத்தாக்கில் கடந்த 4ம் தேதி ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக பலத்த மழை கொட்டியது. இதனால், டீஸ்தா நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் சுங்தாங் அணை உடைந்து, மங்கன், கேங்டாக், நாம்சி, பாக்யாலங் ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தால் மூழ்கின. 14 பாலங்கள், 10க்கும் மேற்பட்ட சாலைகள் கடுமையாக சேதம் அடைந்தன.இதில் 23 ராணுவ வீரர்கள், 43 ராணுவ வாகனங்கள் மற்றும் 200க்கும் மேற்பட்டோர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. 9 ராணுவ வீரர்கள் உயிரிழந்த நிலையில், பலியானோர் எண்ணிக்கை 82 ஆக அதிகரித்துள்ளது.

மாயமானவர்களை தேடும் பணி தொடர்ந்து வருகிறது.140 பேரை காணவில்லை என்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதற்கிடையே வடக்கு சிக்கிம் மலைப்பகுதியில் ஒரு வாரமாக சிக்கி தவித்த 56 பேரை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கயிறு மூலம் மீட்டனர்.ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் மேடான மலைப்பகுதியில் குழுவாக தங்கி இருந்ததாகவும் வெளியேற வழியில்லாததால் கடும் சிரமங்களை சந்தித்ததாகவும் மீட்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர். சுமார் 1,700 சுற்றுலா பயணிகள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வெள்ளைப்பாதிப்பால் சேறு நிறைந்த ஏராளமான வீடுகள் மண்குவியல்களாக காட்சி அளிக்கின்றன.

The post சிக்கிம் வெள்ளப்பெருக்கில் பலி எண்ணிக்கை 82 ஆக அதிகரிப்பு.. 140 பேர் மாயம்.. ஒரு வாரத்திற்கு பிறகு 56 பேர் உயிருடன் மீட்பு!! appeared first on Dinakaran.

Tags : Sikkim ,Gangtok ,northeastern ,Lachen Valley ,
× RELATED காஞ்சி சங்கரா பல்கலைக்கழகத்தில் வேதபாடசாலை மாணவர்கள் ஆய்வு