×

விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல் துறையூரில் குழந்தைகள் உரிமைக்கு எதிரான குறைதீர் கூட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு

திருச்சி: துறையூர் இமயம் கல்லூரியில் கலெக்டர் தலைமையில் இன்று நடைபெறும் குழந்தைகள் உரிமைக்கு எதிரான குறைதீர் கூட்டம் குறித்த பொதுமக்களிடம் பேரணி நடத்தியும், துண்டு பிரசுரம் வழங்கியும் விழிப்புணர்வு வழங்கப்பட்டது. தேசிய குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணையம் சார்பில் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு சிறப்பு அமர்வு திருச்சி கலெக்டர் தலைமையில் துறையூர் இமயம் பாலிடெக்னிக் கல்லூரியில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆட்டோ விழிப்புணர்வு பேரணியை திருச்சி மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு தொடங்கி வைத்து பொதுமக்கள், பயணிகள், வியாபாரிகள் ஆகியோருக்கு துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தார். தமிழன்னை சாரிட்டபிள் டிரஸ்ட் நிறுவனர் கண்ணன், பொருளாளர் சுமதி, சமூக ஆர்வலர்கள் உமாபதி,கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டு கொண்டனர்.

 

The post விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல் துறையூரில் குழந்தைகள் உரிமைக்கு எதிரான குறைதீர் கூட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Tharuyur ,Trichy ,Shariyur Imam College ,
× RELATED திருச்சி ரயில் நிலையத்தில் நடனமாடி...