×

சின்னதடாகம் அருகே பைக்கில் கஞ்சா கடத்திய வடமாநில வாலிபர்கள் கைது

 

பெ.நா.பாளையம், அக்.9: கோவை சின்னதடாகம் அருகே உள்ள மாங்கரை சோதனை சாவடியில் தடாகம் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது கேரளா கோட்ட துறையில் இருந்து பைக்கில் சந்தேகத்திற்கிடமாக வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

போலீசார் விசாரணையில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த வினோத் (34) சதீஷ்(29) ஆகியோர் என்பதும், நண்பர்களான இருவரும் பெயிண்டிங் வேலை செய்து வருவதும், கேரளாவில் இருந்து கஞ்சாவை எடுத்து வந்து விற்பனை செய்வதும் தெரியவந்தது. இவர்களிடம் இருந்து 300 கிராம் கஞ்சா, பைக்கை பறிமுதல் செய்த தடாகம் போலீசார் அவர்களை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

The post சின்னதடாகம் அருகே பைக்கில் கஞ்சா கடத்திய வடமாநில வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : North State ,Chinnathadagam ,B.N.Palayam ,Tadagam ,Mangarai ,Chinnathadagam, Coimbatore.… ,Dinakaran ,
× RELATED மில் ஓனர், வடமாநில தொழிலாளர்களை...