×

நாகுடி அருகே மாணவநல்லூர் கிராமத்தில் ரூ.8.54 லட்சத்தில் புதிய ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணி

அறந்தாங்கி: நாகுடி அருகே மாணவநல்லூர் கிராமத்தில் ரூ.8.54 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆழ்குழாய் கிணறு அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் நாகுடி ஊராட்சிக்கு உட்பட்ட மாணவநல்லூர் கிராமத்தில் அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் 2022-23ம் நிதியாண்டில் நாகுடி ஊராட்சி 15வது மானியக்குழு திட்டத்தில் ரூ.8.54 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆழ்குழாய் அமைக்க பணி பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் நல்லதம்பி, நாகுடி ஊராட்சி செயலாளர் (பொ) மாங்குடிகணேசன், வார்டு உறுப்பினர்கள் ராஜலிங்கம், பட்டு ரவி, முருகானந்தம், ராஜசேகரன் மற்றும் மாணவநல்லூர் கிராம முக்கிய நிர்வாகிகள் அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post நாகுடி அருகே மாணவநல்லூர் கிராமத்தில் ரூ.8.54 லட்சத்தில் புதிய ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணி appeared first on Dinakaran.

Tags : Manavanallur ,Nagudi ,Amanthangi ,Bhumi ,Munawanallur ,Mumavanallur ,Dinakaraan ,
× RELATED அறந்தாங்கி அருகே மக்களை அச்சுறுத்தும் உடைந்த மின்கம்பம்