×

ஓசூர் நெசவாளர் தெருவில் பழுதடைந்த மின்கம்பம்-அப்புறப்படுத்த கோரிக்கை

ஓசூர் : ஓசூர் நெசவாளர் தெருவில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள தனியார் திருமண மண்டபம் பகுதியில், மின்கம்பம் ஒன்று மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ள மின்கம்பத்தை பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், இப்பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும், சிறிய அளவிலான தொழிற்கூடங்கள், கடைகளும் செயல்பட்டு வருகின்றன. இதனால், எப்போதும் மக்கள் நடமாட்டம் காணப்படும். எனவே, பழுதடைந்த மின்கம்பதால் உயிர்பலி ஏற்படும் முன்பு பாதுகாப்பாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்….

The post ஓசூர் நெசவாளர் தெருவில் பழுதடைந்த மின்கம்பம்-அப்புறப்படுத்த கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Hosur Weaver Street ,Hosur ,Dinakaran ,
× RELATED கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையிலிருந்து...