×

காதலனுடன் மனைவி ஓட்டம் 250 பேருக்கு பிரியாணி, மது விருந்து கொடுத்து கொண்டாடிய கணவன்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

கோழிக்கோடு: கேரள மாநிலம் கோழிக்கோடு வடகராவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது 40 வயது கணவனை பிரிந்து காதலனுடன் ஓட்டம் பிடித்தார். வழக்கமாக மனைவி பிரிந்து சென்றால் கணவன் சோகத்தில் மூழ்குவது வழக்கம். ஆனால், முதலில் சோகத்தில் இருந்த கணவன் சில நாட்களில் மனைவி ஓடிப்போனதால் மகிழ்ச்சியடைந்தார். இதை கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்த அவர், 250 பேரை தனது வீட்டுக்கு அழைத்து மது வாங்கி கொடுத்து, பிரியாணி சமைத்து பரிமாறி உள்ளார். பின்னர் அனைவரும் ஒன்று சேர்ந்து, குத்தாட்டம் போட்டுள்ளனர். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

The post காதலனுடன் மனைவி ஓட்டம் 250 பேருக்கு பிரியாணி, மது விருந்து கொடுத்து கொண்டாடிய கணவன்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Tags : Otam ,Kozhikode ,Vadakara, Kozhikode, Kerala ,
× RELATED கேரளாவில் ஓட்டு போட வந்த இடத்தில்...