×

பள்ளிகொண்டா அருகே பைக் மீது பஸ் மோதி கல்லூரி மாணவன் பலி

பள்ளிகொண்டா, அக்.8: பள்ளிகொண்டா அருகே பைக் மீது பஸ் மோதி கல்லூரி மாணவன் பலியானார். பள்ளிகொண்டா அடுத்த ஒதியத்தூர் கிராமம், பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் கவுதம்(18). இவர் பள்ளிகொண்டா, வேப்பங்காலில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், வழக்கம்போல் நேற்று காலை கவுதம் கல்லூரிக்கு பைக்கில் சென்றுள்ளார். ஒதியத்தூர் அடுத்த கொமளாங்குட்டை சாலையில் சென்று கொண்டிருந்தபோது, பள்ளிகொண்டாவில் இருந்து டி.சி.குப்பம் நோக்கி அதிவேகமாக எதிரே வந்த மினிபஸ் பைக் மீது மோதியதில் கவுதம் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார்.

உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்சில் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் கவுதம் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கவுதமின் தந்தை வெங்கடேசன் பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post பள்ளிகொண்டா அருகே பைக் மீது பஸ் மோதி கல்லூரி மாணவன் பலி appeared first on Dinakaran.

Tags : Pallikonda ,Odiyathur ,Dinakaran ,
× RELATED (வேலூர்) திருமண மண்டபத்தின்...