- சிவகங்கை
- சிவகங்கை
- அறிஞர்
- அண்ணா நெடுந்தூர
- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்
- சிவகங்கை அரண்மனை வாயில்
சிவகங்கை, அக். 8: சிவகங்கை அரண்மனைவாசல் முன் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டம் நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், 17 முதல் 25 வயதிற்குட்பட்ட மற்றும் 2 5வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் பிரிவினர் மற்றும் பெண்கள் பிரிவினர் என மொத்தம் 130க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஆண்கள் பிரிவிற்கு தொண்டி பைபாஸ் சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகம் வரையிலும், பெண்கள் பிரிவிற்கு தொண்டி பைபாஸ் சாலையில் உள்ள பையூர் பஸ் நிறுத்தம் வரையிலும் போட்டி நடைபெற்றது. தொடக்க நிகழ்ச்சியில், நகர்மன்றத் தலைவர் துரைஆனந்த், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ்கண்ணன், நகர்மன்ற உறுப்பினர் அயூப்கான் மற்றும் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post சிவகங்கையில் நெடுந்தூர ஓட்டம்: திரளானோர் பங்கேற்பு appeared first on Dinakaran.