×

கோட்டூர்புரம் தேவாலயத்தில் ரூ.10 லட்சம் திருடிய 4 பேர் கைது

 

சென்னை, அக்.8: அடையாறு பகுதியில் வசித்து வருபவர் பென்சன் ஜெயராஜ் (73), இவர் கோட்டூர்புரம் பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்தில் பொருளாளராக இருந்து வருகிறார். இவர் கடந்த 1ம் தேதி இரவு தேவாலயத்தில் காணிக்கை பணம் சுமார் ரூ.10 லட்சத்தை தேவாலயத்தில் உள்ள பீரோவில் வைத்து வீட்டிற்கு சென்றுள்ளார். மறுநாள் காலை பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த சுமார் ரூ.10 லட்சம் காணாமல் போனது தெரிந்தது. இதுகுறித்து, பென்சன் ஜெயராஜ், கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், தேவாலயத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் தரமணி பகுதியை சேர்ந்த சகேயு (53), நெல்லூரை சேர்ந்த அராவா சதாசிவா (51), திருமுரு தனுஷ் (19), போக்குர் கணேஷ் (22), ஆகிய 4 நபர்கள் திருடி செல்வது பதிவாகியிருந்தது. இதனையடுத்து போலீசார் இவர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து பணம் ரூ.3,40,000 பறிமுதல் செய்து விசாரித்தனர்.

விசாரணையில் சகேயு என்பவர் தேவாலயத்தில் பணிபுரிந்து வந்ததும், அவரின் நடவடிக்கை சரியில்லாத காரணத்தினால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தேவாலயத்தில் இருந்து பணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்தது. இதனால் கோபமடைந்த சகேயு ஆந்திராவில் இருந்து ஆட்களை வரவழைத்து, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட 4 நபர்களும் விசாரணைக்குப் பின்னர், சிறையில் அடைக்கப்பட்டனர்.

The post கோட்டூர்புரம் தேவாலயத்தில் ரூ.10 லட்சம் திருடிய 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Kotturpuram ,Chennai ,Benson Jayaraj ,Adyar ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...