×

நாகர்கோவிலில் மகிளா காங்கிரஸ் பேரணி: விஜய்வசந்த் எம்.பி. பங்கேற்பு

நாகர்கோவில், அக்.8: ராகுல் காந்தியை 10 தலை ராவணன் போல் பா.ஜ. விமர்சனம் செய்ததை கண்டித்து நாகர்கோவிலில் மகிளா காங்கிரஸ் சார்பில் பேரணி நடைபெற்றது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டும், ராகுல் காந்தியை 10 தலை ராவணன் போல் பா.ஜ. விமர்சனம் செய்ததை கண்டித்தும் மகிளா காங்கிரஸ் சார்பில் வடசேரி சந்திப்பில் இருந்து வடசேரி ஆராட்டு ரோடு காந்தி பூங்கா வரை அமைதி பேரணி நடைபெற்றது. பேரணி தொடக்க நிகழ்ச்சிக்கு நாகர்கோவில் மாநகர மாவட்ட தலைவர் நவீன் குமார் தலைமை வகித்தார். மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி சோனிவிஜிலா முன்னிலை வகித்தார். விஜய் வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தார்.

பேரணியில் மண்டல தலைவர் இளங்கோ, சாந்தி ரோஸ்லின் உள்பட பலர் கலந்து கொண்டனர். காந்தி சிலைக்கு மாலை அணிவித்த பின் பேரணி நிறைவு பெற்றது. பின்னர் விஜய் வசந்த் எம்.பி. கூறியதாவது, வருகிற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ராகுல் காந்தி பிரதமராவது உறுதியாகிவிட்டது. இதனால் பாரதிய ஜனதா கட்சி ராகுல் காந்தியை பத்து தலை ராவணனாக விமர்சனம் செய்துள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்தியா கூட்டணி உருவானதில் இருந்து பாரதிய ஜனதா பயத்தில் ஏதேதோ சொல்லி வருகிறது. தேர்தலில் காங்கிரஸுக்கு வெற்றி நிச்சயம். பாஜகவுக்கு தோல்வி நிச்சயம். தமிழகத்தில் பாரதிய ஜனதா ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது. இவ்வாறு அவர் கூறினார்.

The post நாகர்கோவிலில் மகிளா காங்கிரஸ் பேரணி: விஜய்வசந்த் எம்.பி. பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Mahila Congress rally ,Nagercoil ,Vijayvasant ,BJP ,Rahul Gandhi ,Ravana ,Mahila Congress ,Mahila Congress Rally in ,Dinakaran ,
× RELATED இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்து...