×

கருமலைநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி யாகம், அபிஷேகம்

ஜெயங்கொண்டம், அக்.8: ஒவ்வொரு மாதமும் தேய்பிறையில் வரும் அஷ்டமி காலபைரவருக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதனை ஒட்டி ஜெயங்கொண்டம் கருமலைநாதர் கோவிலில் உள்ள காலபைரவருக்கு சிறப்பு யாகமும், அபிஷேகமும் நடந்தது. யாகத்தில் மஞ்சள், குங்குமம், வெட்டிவேர், நன்னாரி வேர், கடுக்காய், வெண்கடுகு உள்ளிட்ட பல்வேறு வகையான மூலிகைகள் மா, பலா, வாழை, திராட்சை, மாதுளை, எலுமிச்சை உள்ளிட்ட பழங்கள் இடப்பட்டன. பின்னர் சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

ஜெயங்கொண்டம் அருகிலுள்ள செங்குந்தபுரம் மாரியம்மன் கோயிலில் உள்ள கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி தினத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கால பைரவரை தரிசித்துச் சென்றனர்.

The post கருமலைநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி யாகம், அபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Teipirai Ashtami Yaga ,Abhishekam ,Karumalainadhar Temple ,Teipira ,Karumalainadhar ,Teipirai Ashtami Yagam ,
× RELATED மல்லிகைநத்தம் கிராமத்தில் செல்வ விநாயகர் கோயில் வருடாபிஷேகம்