×

திருவெறும்பூர் அருகே ரயில்வே ஆடிட்டர் மயங்கி விழுந்து சாவு

திருவெறும்பூர், அக்.8: திருவெறும்பூர் அருகே ரயில்வே ஆடிட்டர் திடீரென மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள ஆலத்தூர் ஆனந்தம் நகர் 4வது தெருவை சேர்ந்தவர் வீரப்பன் (52). இவர் திருச்சி ரயில்வேயில் ஆடிட்டராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இவருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி ரயில்வே மருத்துவமனையில் குடல் இறக்கத்திற்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

சிகிச்சைக்கு பிறகு வீரப்பன் வீட்டிலேயே இருந்து வந்தாராம். இந்நிலையில் நேற்று மாலை வீட்டின் அருகேயுள்ள சுடுகாடு பகுதியில் மயங்கி நிலையில் வீரப்பன் விழுந்து கடந்துள்ளார். அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு பொன்மலை ரயில்வே மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு வீரப்பனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வீரப்பனின் மகன் தர் (21) திருவெறும்பூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருவெறும்பூர் அருகே ரயில்வே ஆடிட்டர் மயங்கி விழுந்து சாவு appeared first on Dinakaran.

Tags : Tiruverumpur ,Trichy district ,Dinakaran ,
× RELATED திருச்சி மாவட்டம் திருவெறும்பூர்...