ராமேஸ்வரம்: இலங்கையில் உள்ள மன்னார் மாவட்டம், பேச்சாளையைச் சேர்ந்த தேவராஜன், போதைப்பொருள் கடத்தல் ஏஜென்ட். இவர், அந்த நாட்டு போலீசாரிடமிருந்து தப்பி, ராமேஸ்வரம் தீவுப்பகுதிக்கு வந்து பதுங்கினார். நேற்று முன்தினம் இரவு ராமேஸ்வரம் அருகே, பாம்பன் குந்துகால் கடற்கரை பகுதியில் பதுங்கியிருந்த தேவராஜனை மீனவர்கள், மடக்கிப்பிடித்து பாம்பன் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
The post ராமேஸ்வரத்தில் இலங்கை கடத்தல் ஏஜென்ட் சிக்கினார் appeared first on Dinakaran.