×

ரூ35.79 கோடி சொத்து குவிப்பு: மாஜி அமைச்சர் கோர்ட்டில் ஆஜர்

புதுக்கோட்டை: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 56 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் ரூ.35 கோடியே 79 லட்சம் மதிப்பு அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அவரது பெயரிலும், மனைவி ரம்யா பெயரிலும் வாங்கி குவித்தது தெரிய வந்தது. இவர்கள் மீது கடந்த மே 22ம் தேதி போலீசார் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் 216 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது விஜயபாஸ்கர் நேரில் ஆஜரானார். இதையடுத்து நீதிபதி பூரண ஜெய ஆனந்த், விசாரணையை வரும் 30ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

The post ரூ35.79 கோடி சொத்து குவிப்பு: மாஜி அமைச்சர் கோர்ட்டில் ஆஜர் appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,AIADMK ,minister ,C.Vijayabaskar ,
× RELATED புதுக்கோட்டை அருகே மின்னல் தாக்கி இளைஞர் பலி..!!