×

கடன் பெற்றவரை தாக்க முயன்ற நிதி நிறுவன ஊழியர் மீது வழக்கு

ஆண்டிபட்டி, அக். 7: ஆண்டிபட்டி அருகே க.விலக்கு அன்னை இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் பிரபு(36). இவர் கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் தேனியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் அவரது வீட்டை அடமானம் வைத்து கடனாக ரூ.3 லட்சம் பெற்றதாகவும், இதற்கு மாத தவணையாக ரூ.8630 கடந்த ஆகஸ்ட் மாதம் வரை 67 தவணைகள் கட்டியிருப்பதாக தெரிகிறது.

கடந்த மாதம் 19ம் தேதி வீட்டு பத்திரத்தை நிதி நிறுவன மேலாளரிடம் பிரபு கேட்டபோது, அதற்கு இன்னும் 16 மாத தவணை கட்ட வேண்டியதாக தெரிவித்தாக தெரிகிறது. இதனால் நிதி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் பிரபுவின் வீட்டில் பெயிண்டால் லோன் கட்டவில்லை என எழுதியதாகவும், இதனை தடுக்க வந்த பிரபுவை தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பிரபு க.விலக்கு போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் தனியார் நிதி நிறுவன ஊழியர் மகேந்திர பிரபு மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post கடன் பெற்றவரை தாக்க முயன்ற நிதி நிறுவன ஊழியர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Antipatti ,Prabhu ,K.Vilakku Annai Indiranagar ,Andipatti ,Dinakaran ,
× RELATED ஆண்டிப்பட்டி மேகமலை அருவியில் திடீர்...