×

மணல் கடத்திய 15 மாட்டு வண்டிகள் பறிமுதல் 10 பேர் கைது கே.வி.குப்பம், பேர்ணாம்பட்டில் எஸ்பி தனிப்படை போலீசார் ரெய்டு

வேலூர், அக்.7: வேலூர் மாவட்டத்தில் சட்ட விரோத கணிமவள கொள்ளையை தடுக்க எஸ்பி மணிவண்ணன் பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி நேற்று வேலூர் எஸ்பியின் தனிப்படை போலீசார் பேர்ணாம்பட்டு மற்றும் கே.வி.குப்பம் காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதியில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது சட்டவிரோதமாக மாட்டு வண்டிகளில் ஆற்று மணல் கடத்தி வந்த 15 மாட்டு வண்டிகளை போலீசார் மடக்கி பிடித்து பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 10 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்பி எச்சரித்துள்ளார். இதேபோல் மாவட்டம் முழுவதும் நேற்று போலீசார் நடத்திய கள்ளச்சாராய ரெய்டில் ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராய ஊரல்களும், 60 கள்ளச்சாராயம் 87 மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் 200 கிராம் கஞ்சா 120 கிராம் குட்கா பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 11 வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர்.

The post மணல் கடத்திய 15 மாட்டு வண்டிகள் பறிமுதல் 10 பேர் கைது கே.வி.குப்பம், பேர்ணாம்பட்டில் எஸ்பி தனிப்படை போலீசார் ரெய்டு appeared first on Dinakaran.

Tags : SP ,KV Kuppam, Bernampat ,Vellore ,Manivannan ,KV ,Kuppam ,Pernambat ,Dinakaran ,
× RELATED தகவல் பகிர 772 வாட்ஸ் அப் குழுக்கள்...