×

பஞ். செயலரை தாக்கி நகை பறிப்பு

களக்காடு, அக். 7: களக்காடு அருகே மாவடி, ராமச்சந்திராபுரத்தை சேர்ந்தவர் கனித்துரை (45). இவர், கள்ளிகுளம் பஞ். செயலராக உள்ளார். நேற்று கனித்துரை, கீழதுவரைகுளம் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த போது சத்திரம் கள்ளிகுளத்தை சேர்ந்த லெட்சுமணன் மகன் சிங்கப்பாண்டி (32), அவரது உறவினரான கோபால் மகன் சங்கர் (31) ஆகியோர் கனித்துரையை திடீரென வழிமறித்தனர். அப்போது அவர் நிலைதடுமாறி பைக்கில் இருந்து கீழே விழவே சிங்கப்பாண்டி, சங்கர் ஆகியோர் சரமாரியாக தாக்கினர். மேலும் கனித்துரை அணிந்திருந்த 3.5 பவுன் எடையுள்ள தங்க செயின், 9 கிராம் எடையுள்ள மோதிரம் ஆகியவற்றை பறித்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. தாக்குதலில் காயமடைந்த கனித்துரை சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து களக்காடு போலீசார் வழக்கு பதிந்து சிங்கப்பாண்டி, சங்கர் ஆகியோரை தேடி வருகின்றனர்.

The post பஞ். செயலரை தாக்கி நகை பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Kalkakau ,Ganitura ,Mawadi, Ramachandrapuram ,Kalakat ,Dinakaraan ,
× RELATED சென்னை சாம்பியன் வென்றது மாநில அளவிலான குத்துச்சண்டை