×

கொலை வழக்கில் கைதானவர் மீது குண்டாஸ்

நெல்லை, அக். 7: நெல்லை அருகே கொலை வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சேரன்மகாதேவியை சேர்ந்தவர் கணேசன்(39). இவர், கடந்த 28-8-2023 அன்று கோபாலசமுத்திரம் பகுதியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முன்னீர்பள்ளம் போலீசார், பலரை கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய 4 பேர், ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சேரன்மாகாதேவியை சேர்ந்த பெருமாள்சுப்பிரமணியன் என்ற பாட்ஷா(36) என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க நெல்லை எஸ்பி சிலம்பரசன், கலெக்டருக்கு பரிந்துரைத்தார். இதையடுத்து கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் பாட்ஷாவை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான உத்தரவு நகலை முன்னீர்பள்ளம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜீன்குமார், பாளை. மத்திய சிறையில் வழங்கினார். நெல்லை மாவட்டத்தில் இந்தாண்டு இதுவரையில் 126 பேர் குண்டர் தடுப்பு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post கொலை வழக்கில் கைதானவர் மீது குண்டாஸ் appeared first on Dinakaran.

Tags : Guntas ,Paddy ,Nellai ,Cheranmahadevi ,Kundas ,Dinakaran ,
× RELATED நெல்லையில் அரசு பேருந்து ஓட்டுநர்,...