×

விஷக்கொட்டை சாப்பிட்ட 3 குழந்தைகளுக்கு சிகிச்சை

சேலம்: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி பக்கமுள்ள காடையாம்பட்டி அருந்ததியர் காலனியை சேர்ந்த ரித்திகா(8) 3ம்வகுப்பு படித்து வருகிறார். கெங்கவல்லி கடம்பூரில் 2ம்வகுப்பு படித்து வரும் ரித்விகா(7), கடம்பூரில் 3ம்வகுப்பு படித்து வரும் பிரணிகா(8) இவர்கள் இருவரும் காடையாம்பட்டியில் உள்ள பாட்டி வீட்டிற்கு வந்தனர். 3 குழந்தைகளும் ஒரே இடத்தில் வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டிருந்தனர். நேற்றுமுன்தினம் மாலை விஷக்கொட்டையை சாப்பிட்டுள்ளனர். பின்னர் அவர்கள் வாந்தி எடுத்ததையடுத்து உடனடியாக 3 பேரையும் ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post விஷக்கொட்டை சாப்பிட்ட 3 குழந்தைகளுக்கு சிகிச்சை appeared first on Dinakaran.

Tags : Salem ,Arunthathiyar Colony ,Kadayampatti ,Divattipatti, Salem District ,Kengavalli Kadapur ,
× RELATED போதைக்காக வலி நிவாரண மாத்திரைகள் பதுக்கி விற்பனை