×

தேய்பிறை அஷ்டமியையொட்டி அதியமான்கோட்டை காலபைரவர் கோயிலில் சிறப்பு பூஜை

தர்மபுரி: தேய்பிறை அஷ்டமியையொட்டி, அதியமான்கோட்டை காலபைரவர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ராஜ அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். தர்மபுரி அதியமான்கோட்டையில் உள்ள தட்சணகாசி காசி காலபைரவர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதிகாலையில் விஸ்வரூப தரிசனமும், அதை தொடர்ந்து கணபதி ஹோமம், 64 பைரவர் ஹோமம், ஏகாந்த ருத்ர ஹோமம், கோ பூஜை, அஸ்வத பூஜை நடந்தது. காலை 8.30 மணியளவில் உற்சவமூர்த்தி வீதி உலா வந்து அருள்பாலித்தார். காலை 9 மணியளவில் பைரவருக்கு 18 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது. இதையடுத்து, காலபைரவர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பூசணியில் விளக்கேற்றியும், நெய்விளக்கு ஏற்றியும் வழிபட்டனர். தொடர்ந்து இரவில் மிளகாய் யாகம், மிளகு சத்ரு சம்ஹார யாகம், மகா குருதி பூஜை நடந்தது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம் செய்திருந்தது.

The post தேய்பிறை அஷ்டமியையொட்டி அதியமான்கோட்டை காலபைரவர் கோயிலில் சிறப்பு பூஜை appeared first on Dinakaran.

Tags : Athiyamankot Kalabhairava Temple ,Theipirai Ashtami ,Teipira ,Ashtami ,
× RELATED தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு...