×

சூரியகுமார் சிறப்பாக விளையாடுவார்: டிராவிட் நம்பிக்கை

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், சென்னையில் நேற்று மாலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள சுப்மன் கில் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பிலும் சிகிச்சையிலும் இருக்கிறார். போட்டி தொடங்க இன்னும் 36 மணி நேரத்திற்கு மேல் உள்ளது. எனவே, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் கில் களம் இறங்குவாரா என்ற கேள்விக்கு இடமில்லை. சூரியகுமார் யாதவ் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். தன்னம்பிக்கையுடனும் செயல்பட்டு வருகிறார். ஒரு வீரர் இரண்டு போட்டியில் நன்றாக விளையாடிவிட்டு மற்ற இரண்டு ஆட்டங்களில் சரியாக விளையாடவில்லை என்பதற்காக அணியில் சேர்க்கலாமா வேண்டாமா என்று விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் டி20 யில் விளையாடுவது போன்று இல்லாமல் ஒருநாள் போட்டிக்கேற்ப விளையாட வேண்டும் என்பதையும் கவனத்தில் கொண்டுள்ளார். இந்திய அணியை பொறுத்தவரை நடுவரிசையில் கூடுதல் ரன் குவிப்பது முக்கியம். எதிரணிக்கு பந்துவீசும்போது விக்கெட்களை வீழ்த்துவதும் அவசியம். அது குறித்தும் திட்டமிட்டு இருக்கிறோம். ஒவ்வொரு ஆட்டத்தையும் நம்பிக்கையுடன் எதிர் கொள்வோம்.

The post சூரியகுமார் சிறப்பாக விளையாடுவார்: டிராவிட் நம்பிக்கை appeared first on Dinakaran.

Tags : Suryakumar ,Dravid ,Indian cricket ,Rahul Dravid ,Chennai ,Dinakaran ,
× RELATED சூர்யகுமார், இஷான் கிசான் அதிரடி ஆட்டம்; பெங்களூருவை வீழ்த்தியது மும்பை